தமிழக பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை முப்பருவ முறை இந்த ஆண்டில்
அமல்படுத்தப்பட்டுள்ளது. புத்தக எடை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு
பருவத்துக்கு
ஏற்ப பாடங்களை தொகுத்து ஒரே புத்தகமாக வழங்கப்பட்டது. முதல்
பருவத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஒரு புத்தகமாகவும், 6, 7, 8
வகுப்புகளுக்கு மொழி பாடங்கள், இதர பாடங்களுக்கு என தனித்தனியே 2
புத்தகங்கள் வழங்கப்பட்டது. தற்போது 2-ம் பருவத்துக்கு அக்டோபர் முதல்
டிசம்பர் வரை புத்தகங்கள் அச்சிடப்பட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதை செப்டம்பரிலேயே பள்ளிகளுக்கு வினியோகித்து வழங்க கல்வித்துறை நடவடிக்கை
எடுத்து வருகிறது.1 முதல் 5-ம் வகுப்பு வரை முதல் பருவத்தில் ஒரு புத்தகமாக வழங்கப்பட்டதை மாற்றி, 2வது பருவத்தில் மொழி பாடத்துக்கு ஒன்றும் கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்துக்கு ஒன்றுமாக 2 புத்தகம் வழங்கப்பட உள்ளது.