பள்ளிக்கல்வி இயக்குனராக தேவராஜன், நேற்று நியமிக்கப் பட்டார்.
ஈரோடு மாவட்டம், குமலன்குட்டை கிராமத்தைச்
சேர்ந்த 55 வயதான தேவராஜன், எம்.ஏ., - எம்.எட்., பட்டதாரி. 1995ல்,
போட்டித் தேர்வு
மூலம் மாவட்டக் கல்வி அதிகாரியாக தேர்வு பெற்று, பின் முதன்மைக் கல்வி அலுவலராக, பல மாவட்டங்களில் பணியாற்றினார்.
மூலம் மாவட்டக் கல்வி அதிகாரியாக தேர்வு பெற்று, பின் முதன்மைக் கல்வி அலுவலராக, பல மாவட்டங்களில் பணியாற்றினார்.
இணை இயக்குனர் பதவி உயர்வு பெற்று,
தேர்வுத்துறை, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறை உள்ளிட்ட
பல்வேறு துறைகளிலும், இயக்குனர் பதவி உயர்வுக்குப் பின், தொடக்கக் கல்வி
இயக்குனர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் ஆகிய பதவிகளுக்குப் பின், மாநில
கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனராக பணிபுரிந்து வந்தார்.
தற்போது பள்ளிக்கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் 6ம் தேதி, புதிய பொறுப்பை ஏற்கிறார்.