2,895 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் ரத்து

போட்டித் தேர்வு மூலம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2 ஆயிரத்து 895 பேரை தேர்வு செய்து வெளியிட்ட பட்டியலை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
நிபுணர் குழு சமர்ப்பித்த முக்கிய விடைகள் அடிப்படையில் அனைத்து விடைத்தாள்களையும் மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம்
திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 2,895 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வு மே மாதம் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர்.
போட்டித் தேர்வுக்கான முக்கிய விடைகளும், தேர்வு பெற்றவர்களின் பட்டியலையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதில் பல முக்கிய விடைகள் தவறாக உள்ளதாகக் கூறி தேர்வர்கள் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இந்தத் தேர்வில் விடைத்தாள்கள் முறையாக மதிப்பீடு செய்யப்படவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய விடைகள் பல தவறானவை. அவற்றை அடிப்படையாக வைத்து விடைத்தாள்களும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
இதனால் சரியாக விடையளித்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இடஒதுக்கீடு முறையையும் சரியாக பணி நியமனத்தில் பின்பற்றவில்லை என்று மனுக்களில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் நீதிபதி எஸ். நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு விடைகளை ஆராய்வதற்காக நிபுணர் குழு ஒன்றை அமைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் திங்கள்கிழமை (அக்டோபர் 1) விசாரணைக்கு வந்தது. அப்போது, நிபுணர் குழுவின் அறிக்கையை ஆராய்ந்த நீதிபதி எஸ். நாகமுத்து, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட தேர்வுப் பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அவர் பிறப்பித்த உத்தரவு விவரம்:
ஆசிரியர் தேர்வு வாரியம் தயாரித்த முக்கிய விடைகளில் (ஓங்ஹ் ஹய்ள்ஜ்ங்ழ்ள்) 50-க்கும் மேற்பட்ட விடைகள் தவறானவை என நிபுணர் குழு கூறியுள்ளது. இந்த விடைகள் அடிப்படையில்தான் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்வுப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீட்டு முறையையும் தேர்வு வாரியம் சரியாக அமல்படுத்தவில்லை. உதாரணமாக எஸ். செல்வி என்பவர் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். அவரை பொதுப் பிரிவில்தான் தேர்வு செய்திருக்க வேண்டும். மாறாக, பிற்படுத்தப்பட்டவர் (பெண்கள்) என்ற இடஒதுக்கீட்டுப் பிரிவில் அவரை தேர்வு செய்துள்ளனர். அவரைப் போலவே அதிக மதிப்பெண்கள் பெற்ற பலரும் பொதுப் பிரிவுக்குப் பதிலாக இடஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த செயலால் தகுதியுள்ள ஏராளமானோர் பணி வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, 2,895 பேர் அடங்கிய இந்தப் பட்டியல் ரத்து செய்யப்படுகிறது.
ஆசிரியர் தேர்வு வாரியம் அனைத்து விடைத்தாள்களையும் மறு மதிப்பீடு செய்ய வேண்டும். தேர்வு எழுதியவர்கள் பெற்ற புதிய மதிப்பெண்கள் விவரத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
அதன் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் புதிய பட்டியலை தயாரிக்க வேண்டும். இந்தப் பணிகளை மூன்று வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று நீதிபதி நாகமுத்து தனது உத்தரவில் கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...