பணிமாற்றம் கிடைக்காததால் ஆசிரியை தற்கொலை

உடன்குடியில் பள்ளி ஆசிரியை இடமாற்றம் கிடைக்காததால் விரக்தி அடைந்து அளவிற்கு அதிகமான மாத்திரை தின்று பரிதாபமாக இறந்தார்.உடன்குடியில் சத்யா நகரை சேர்ந்த விஜயசங்கர் இவரது மனைவி முருகேஸ்வரி(40). இவர் ஆசிரியராக வேலூரில் பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு ஜானு என்ற மகளும், மாதேஷ் என்ற மகனும் உள்ளனர். குழந்தைகள் மற்றும் கணவரை பிரிந்து
வேலுரில் வேலை பார்ப்பதால் உடன்குடி அருகே தன் வேலையை மாற்றுவதற்காக முயற்சி மேற்கொண்டு வந்தார்.

ஆனால் இடமாற்றம் கிடைக்காததால் தசரா திருவிழாவிற்கு வந்த ஆசிரியை குழந்தைகளை விட்டுவிட்டு ஆசிரியர் பணிக்கு போக மனமில்லாததால் சம்பவதன்று இரவில் இவர் பிரஸ்ஸார் மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு உயிருக்கு போராடிய இவரை உடனடியாக தூத்துக்குயில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து இவர் கணவர் கொடுத்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டணம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...