விருதுநகரில் ஆசிரியரை கத்தியால் குத்தி விட்டு மாணவர் தப்பி ஓடிய சம்பவம்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் தனியார் பள்ளியில் 9ம்
வகுப்பு படிக்கும் மாணவர் அஜித்குமார். இவர் ஒரு வாரத்திற்கு பின் இன்று
காலை
பள்ளிக்கு வந்துள்ளார். வகுப்பு கணித ஆசிரியர் பாண்டியராஜன்,
அஜித்குமார் வகுப்பிற்கு வராததற்கான காரணம் குறித்து கேட்டுள்ளார். அப்போது
அஜித்குமார், பாண்டியராஜனை இடிப்பில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி
உள்ளார். பாண்டியராஜன் சிகிச்சைக்காக மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பி ஓடிய அஜித்குமாரை தேடும் பணி நடைபெற்று
வருகிறது.