கௌதம புத்தர்-SSTA தமிழ் கட்டுரை

சித்தார்த கௌதம புத்தர்
Siddhārtha Gautama Buddha

புத்தர் சிலை - சாரநாத் அருங்காட்சியகம், கிமு 4
பிறப்பு கிமு 563 அல்லது 623
லும்பினி, நேபாளம்
இறப்பு கிமு 483 அல்லது 543 (வயது 80)
குஷிநகர், உத்தரப் பிரதேசம், இந்தியா
அறியப்படுவது பௌத்த சமயத்தை உருவாக்கியவராவார்
முன்னிருந்தவர் காசாபா புத்தர்
பின் வந்தவர் மைத்ரேயா புத்தர்
பெற்றோர் சுட்தோத்தனா - மாயா
வாழ்க்கைத் துணை யசோதரா
பிள்ளைகள் ராகுலன்
புத்தரின் ஒரு சிலை

தாலி கிரியில் புத்தர் சிலை
கௌதம புத்தரை
அடிப்படையாகக் கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட பெயர் சித்தார்த்த கௌதமர் என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும் அழைக்கப்பட்டார் புத்த சமயத்தின் மிகவும் முக்கியமானவரென்ற வகையில், கௌதமருடைய வாழ்க்கையையும், வழிகாட்டல்களையும், துறவிமட விதிகளையுமே, கௌதமரின் மறைவுக்குப்பின், சுருக்கி பௌத்தத் துறவிகள் மனனம் செய்துவந்தார்கள். அவற்றுள் மிக முக்கியமானதாக தம்மபதம் விளங்குகிறது, பிற மத நூல்களைப் போன்று அல்லாமல் இந்நூல் மக்களின் சாதாரண பேச்சு வழக்கில் உருவக்காப்பட்டது. மேலும் எளிய நடை இதன் சிறப்பம்சம் ஆகும். சீட பரம்பரையூடாக வாய்மொழிமூலம் கடத்தப்பட்டுவந்த இத் தகவல்கள், 100 வருடங்களுக்குப் பின்னர் திரிபிடகம் என்று வழங்கப்படும் நூலாக எழுத்துவடிவம் பெற்றது.

பொருளடக்கம்

  • 1 புத்தரின் வரலாறு
  • 2 புத்தரின் கூற்றுக்கள்
  • 3 புத்தரின் மற்ற பெயர்கள்
    • 3.1 சமஸ்கிரதம்
  • 4 மற்ற மதங்களில் புத்தர்
  • 5 இந்திய புத்தர் கோயிகள்
  • 6 துணை நூற்கள்
  • 7 வெளி இணைப்புகள்
  • 8 மேற்கோள்

புத்தரின் வரலாறு

சித்தார்த்த கௌதமர், இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். மாயா இவரது தாயார். இவரின் பிறப்புக் கொண்டாட்டத்தின் போது சமுகந்தந்த ஞானியொருவர், சித்தார்த்தர் ஒரு பெரிய அரசனாக அல்லது ஒரு ஞானியாக வருவாரென்று எதிர்வு கூறினார். இவர் பிறப்பதற்கு முன்னரே இவரது தாயாரின் கனவில் ஒரு வெள்ளை யானை மீது தான் பயணிப்பதாகவும், அதில் வெள்ளைத் தாமரை சுமந்து செல்வதாகவும் கனவில் தோன்றியது.. கௌதமர் பிறந்த ஏழாவது நாளே அவரது அன்னை இறந்தார். எனவே இவரை இவரது தாயின் தங்கை வளர்த்தார்.
சித்தார்த்தர், தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். அவனது பெயர் ராகுலன். சித்தார்த்தருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் தந்தை ஏற்படுத்தித் தந்தார். வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அரண்மனை வசதிகளை அனுபவிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார் சித்தார்த்தர்.
அவரது 29 ஆவது வயதில் தனது வாழ்க்கையைப் பற்றி யோசிக்கும் தருணம் வாய்க்கப் பெற்றார். ஒருமுறை உதவியாளரொருவருடன் வெளியே சென்றபோது,
  • நான்கு காட்சிகளைக் காண நேர்ந்தது.
  1. ஒரு வயதான தள்ளாடும் கிழவர்,
  2. ஒரு நோயாளி,
  3. அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம்,
  4. நாலாவதாக ஒரு முனிவன்.
இக் காட்சிகளினூடாக மனிதவாழ்க்கையின் துன்பங்களை முதன் முதலில் உணர்ந்துகொண்ட சித்தார்த்தர், வாழ்வின் ரகசியத்தைக் காண கானகம் நோக்கிப் பயணித்தார்.அவர் துறவறம் பூனவில்லை, மாறாக வாழ்வின் ரகசியத்தைக் காண்பதே அவரின் நோக்கம்.
கானகம் நோக்கிச் சென்ற சித்தார்த்தர், அப்போதைய வழக்கப்படி பட்டினி கிடந்து பல நாட்கள் குளிக்காமல் யோக நெறியில் தவத்தில் அமர்ந்தார். இவரின் தவத்தைக் கண்டு சில சீடர்கள் அவர்க்குக் கிடைத்தனர்.
வாரணாசி அருகே உள்ள சாரநாத் எனும் இடத்தில் முதன் முறையாக ஐவரை சீடர்களாக ஏற்றுக்கொண்டு அவர்கட்கு புத்தி புகட்டினார். இந்நிகழ்ச்சி தம்மச் சக்கரப் பிரவாத்தனம் அல்லது அறவாழி உருட்டுதல் என புத்த சமய நூல்களில் அழைக்கப்படும்.
பலநாட்கள் கழித்து ஒரு இசைக்கலைஞன் அவர் தவம புரிந்து கொண்டு இருந்த வழியாகச் சென்ற போது, தனது சீடனிடம் "யாழ் பற்றியும் அதன் நுணுக்கம் பற்றியும் கூறிச் சென்றான், அவற்றில் ஒரு நானை யாழில் இணைக்கும் பொழுது நாண் அதிகமாகவும் இழுத்துக் கட்டினால் நாண் அறுந்து விடும் என்றும், மிகத் தளர்வாகக் கட்டினால் இசை மீட்ட முடியாது என்றும் கூறிக் கொண்டு சென்றான்". சித்தர்த்தாவின் அறிவு அப்போது வேலை செய்ய ஆரம்பித்தது. தனது கடந்த காலத்தில் போதையிலும், பெண் போகத்திலும், செல்வச் செழிப்பிலும் வாழ்ந்த தான் இப்போது அதற்க்கு மிக மாறாக தன்னை வருத்திக் கொண்டு இருக்கிறேன் என்றும், ஐந்தே நிலை நீடிக்குமானால் தனது உடல் இறந்து விடும் என்றும்; தான் தேடி வந்த ஞானம் அடையும் முன்னமே தான் இறந்து விடுவோம் என்றும் உணர்ந்தார். எனவே கடுந்தவம் இருப்பதை கைவிட்டு விடும்படி எண்ணினார். எனவே அதிக போகவாழ்க்கையும் ஞானத்தினைக் கொண்டுவராது, மிக நெடிய தவமும் ஞானத்தைக் கொண்டு வராது என்றும், நெடிய தவம இருந்தால் இவ்வுடல் அழிந்து விடும் என்றும் யோசிக்கத் தொடங்கினார். எனவே முதன் முறையாக அவருக்கு அருகே இருந்த ஆற்றில் சென்று குளிக்க வேண்டுமென முடிவு செய்தார். ஆற்றில் இறங்கும் பொழுது அந்த ஆற்றில் இழுவைக்கூட தன்னால் ஈடு கொடுக்க முடியாமையை உணர்ந்தார். அவ்வாறு ஆற்றில் குளித்து விட்டு வரும் பொழுது, அங்கெ இருந்த ஒரு மாடு மேய்க்கும் பெண் குழந்தை இவரின் நிலையைக் கண்டு தான் கொண்டு வந்த சோற்றை அவருக்கு ஊட்டி விட்டார்.
தனது 35ஆம் வயதில், இந்தியாவின் தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ள கயை எனும் இடத்தில் சுமேதை என்பவளிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு போதி மரத்தினடியில் அமர்ந்த சித்தார்த்தர், ஞான நிலை அடையும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திராமல் நிகழ்வுகளைக் கவனிப்பது என தீர்மானித்தார். ஒரு வாரம் தனது மிக நுண்ணிய கவனிப்பின் பலனாக முதன் முறையாக கவலைக்கு, துன்பத்திருக்குக் காரணம் பற்றியும், தான் முதன் முறையாக மிக மகிழ்ச்சியாக இருப்பதையும் உணர்ந்தார். புரிந்துணர்வையே ஞானத்தின் அடிக்கல் என்பதை உணர்ந்தார். இவர் தத்தாகதர் என்று (அதாவது 'எது உண்மையில் அதுவாக உள்ளதோ அந்த நிலை எய்திவர்') உணர்ந்து கொண்டார். புத்தர் ஞானம் பெற்ற அவ்விடம் இன்று புத்த கயை என்று புத்த மதத்தினரின் யாத்திரைத் தலமாக விளங்குகிறது.
அவரது வாழ்க்கையின் அடுத்த 45 ஆண்டுகளில் பலர் அவரைப் பின்பற்றி அவரது சீடர்கள் ஆயினர். தனது 80ஆம் வயதில் புத்தர் குசினாரா என்ற இடத்தில் காலமானார்.

புத்தரின் கூற்றுக்கள்

புத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் [அவதாரம்] என்றோ கூறிக்கொண்டதில்லை. தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும், புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். ஆசையே துன்பத்தின் அடிப்படை என அவர் கூறினார்.

புத்தரின் மற்ற பெயர்கள்

சமஸ்கிரதம்

ததாகதர் என்ற சமஸ்கிருதச் சொல் தத ஆகத என்ற சொற்களின் சந்தியினால் தோன்றும் சொல். "அவ்வாறு சென்றவர்" என்று பொருள் படும். இது கௌதம புத்தரை குறிக்கும் காரணப்பெயர். புத்தர் சம்சாரக்கடலை கடந்து சென்றவர் என்ற காரணத்தைக்கொண்டு இப்பெயர் அவருக்கு சூட்டப்பட்டது.

மற்ற மதங்களில் புத்தர்

வட இந்தியாவைச் சேர்ந்த வைணவர்கள் புத்தரை விஷ்ணுவின் அவதாரமாக போற்றுகின்றனர்.

இந்திய புத்தர் கோயிகள்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...