அரசு மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக 1,591 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக 1,591 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு 1,591 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை
தோற்றுவிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.63 கோடியே 94 லட்சம் கூடுதல் செலவு ஏற்படும்.
ஏற்கெனவே இயங்கி வரும் 4,393 பள்ளிகள், புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 544 பள்ளிகள் என மொத்தம் 4,937 பள்ளிகளுக்கு ஆய்வக உதவியாளர் பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.
இதில் 544 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை உருவாக்க ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 4,393 பள்ளிகளுக்கும் தலா ஓர் ஆய்வக உதவியாளர் வீதம் 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை உருவாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 2,108 பள்ளிகளுக்கு தலா 1 இளநிலை உதவியாளர் வீதம் 2,108 இளநிலை உதவியாளர் பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இதில் 3,44 பணியிடங்களைத் தோற்றுவிக்க ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
மீதமுள்ள 1,764 இளநிலை உதவியாளர் பணியிடங்களை உருவாக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.109 கோடி கூடுதல் செலவாகும்.
பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், குடிநீர் வசதி, ஆய்வகம், கழிவறை, சுற்றுச்சுவர் ஆகிய கட்டமைப்பு வசதிகளை 131 பள்ளிகளில் ஏற்படுத்துவதற்கு ரூ.152 கோடியே 73 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...