வாக்காளர் பட்டியலில் திருத்தம் : 20ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கு, வரும் 20ம் தேதிவரை தேர்தல் கமிஷன் கால அவகாசம் வழங்கியுள்ளது.

இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல், அடுத்தாண்டு ஜனவரி, 1ம் தேதி வெளியிடப்படுகிறது. இதையடுத்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,

நீக்குதல் மற்றும் திருத்தம் செய்வதற்கு, கடந்த மாதம் முதல் தேதியில் இருந்து நேற்று வரை, கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த கால அவகாசத்தை, வரும், 20ம் தேதி வரை நீட்டித்து, தேர்தல் வாரியம் அறிவித்துள்ளது. இக்காலத்தில், எவ்வித சிறப்பு முகாமும் நடத்தப்பட மாட்டாது. இதனால், திருத்தப் பட்ட வாக்காளர் பட்டியல், ஜனவரி மாதம், 15ம் தேதி வெளியிடப்படும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...