கும்பகோணம் பள்ளி தீ விபத்து : நிவாரணம் குறித்து ஆராய ஒரு நபர் விசாரணை ஆணையம்

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை அளிப்பது குறித்து ஆராய ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த
குழந்தைகளின் குடும்பத்துக்கும், காயமடைந்த குழந்தைகளுக்கும் போதிய நிவாரணம் வழங்கக் கோரி கும்பகோணத்தைச் சேர்ந்த கே. இன்பராஜ் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி. பரந்தாமன், கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கப்பட வேண்டிய போதிய நிவாரணத் தொகை குறித்து ஆராய உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிட்டார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...