குழந்தைகளுக்கான
உரிமை தினம் 20ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. நவம்பர் மாதம் 13ம் தேதி
முதல் 20ம் தேதி
வரை உலக செயல்பாடு வாரமாக கடைப்படிக்கப்படுகிறது. இன்று
உலக நிமோனியா தினமாகவும், 14ம் தேதி குழந்தைகள் தினமாகவும், நவம்பர் 18ம்
தேதி அங்கன்வாடி தினமாகவும், நவம்பர் 19ம் தேதி உலக கழிப்பிடம் தினமாகவும்,
நவம்பர் 20ம் தேதி உலக குழந்தைகள் உரிமை தினமாகவும்
கடைப்படிக்கப்படுகிறது. உலக அளவில்இந்தியாவில் தான் 5 வயது நிறைவடையும் முன்பே அதிகளவில் குழந்தைகள் இறப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதனால் உலக செயல்பாடுகள் வாரத்தை முன்னிட்டு,"வேல்டு விஷன்' அமைப்பு சார்பில், இந்தியாவில் 5 வயதுக்கு முன்னாள் இறக்கும் குழந்தைகள் சதவீதத்தை குறைக்கும் வகையில் விழிப்புணர்வு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.