ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர் பணியிடங்கள்: சென்னையில் கலந்தாய்வு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளுக்கு, ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு, இம்மாதம், 15ம் தேதி, சென்னையில் கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது.கடந்த, 2010-11ம் ஆண்டில்
, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில், காலியாக உள்ள பட்டதாரி காலி பணியிடங்களை நிரப்புவதற்கு, ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம், தேர்வு நடத்தப்பட்டது. இதில், தேர்வானவர்களுக்கு, இம்மாதம், 15ம் தேதி, சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகத்தில், கலந்தாய்வு கூட்டம் நடக்கும் என, அரசு அறிவித்துள்ளது. மேலும், தேர்வானவர்கள், உரிய சான்றுகளுடன் வர வேண்டும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...