எம்.பி.பி.எஸ். தேர்வில் வெற்றி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்களை மாற்றியதில் தவறில்லை: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் பதில்

எம்.பி.பி.எஸ். தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு தேவையான தகுதி மதிப்பெண்களில் மாற்றம் செய்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் புதிய விதிமுறைகளை உருவாக்கியதில் தவறில்லை என்று பல்கலைக்கழகப் பதிவாளர் கூறியுள்ளார்.
 எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வில் வெற்றி பெறுவதற்குத் தேவையான தகுதி மதிப்பெண்களில் மருத்துவப் பல்கலைக்கழகம் சில மாற்றங்களைச் செய்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதலாம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இந்த புதிய விதிமுறையின் அடிப்படையில் அண்மையில்
வெளியிடப்பட்டன.
 இந்த புதிய விதிமுறையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலர் உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுமே எம்.பி.பி.எஸ். தேர்வில் வெற்றி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும். அத்தகைய தகுதி மதிப்பெண்களை நிர்ணயிக்க மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் இல்லை. ஆகவே, மருத்துவப் பல்கலைக்கழகத்தின் புதிய விதிமுறைகள் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று மாணவர்கள் தங்கள் மனுக்களில் கோரியுள்ளனர்.
 இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது மருத்துவப் பல்கலைக்கழகப் பதிவாளர் டாக்டர் கே. சிவசங்கீதா சார்பில் வழக்குரைஞர் நர்மதா சம்பத் பதில் மனு தாக்கல் செய்தார்.
 மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கிலேயே தேர்வில் வெற்றி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்களில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் மாற்றங்களைச் செய்தது. கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இதுபோன்ற விதிமுறைகளை உருவாக்கிட பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் உள்ளது. மேலும், பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சிலும் ஒப்புதல் அளித்துள்ளது என்று அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...