லாகூர் ரவுண்டானாவுக்கு பகத் சிங் பெயர் சூட்ட உத்தரவு

பாகிஸ்தானின், லாகூரில் உள்ள, ரவுண்டானாவுக்கு, சுதந்திர போராட்ட வீரர், பகத் சிங் பெயர் சூட்டப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு, பாகிஸ்தானில், வழக்கத்தில் இருந்த இந்து பெயர்கள், மாற்றம் செய்யப்பட்டு விட்டன.இதற்கிடையே, லாகூரில், ஷத்மான் சவுக்கில் உள்ள ரவுண்டானாவுக்கு பகத் சிங்
பெயர் சூட்டப்படுவதற்கு, சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த, சுதந்திர போராட்ட வீரர் சவுத்ரி ரஹ்மான் அலி பெயரை சூட்ட வேண்டும் என, சிலர் கோரியிருந்தனர்.இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங், பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றதற்காக, லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 1931ம் ஆண்டு, மார்ச் மாதம், இவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது."பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போரிட்டு, உயிர் நீத்த பகத் சிங் பெயரைச் சூட்ட வேண்டும்' என, லாகூர் நகர நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.ஆனால், மும்பை தாக்குதலில் சம்பந்தப்பட்ட, பயங்கரவாத அமைப்பான "ஜமாத் -உத்- தாவா' உள்ளிட்டவை, பகத் சிங் பெயர் வைப்பதற்கு, தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தன."சீக்கியரின் பெயரைச் சூட்டினால், கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்' என, மிரட்டல் வந்ததால், பகத் சிங் பெயர் எழுதப்பட்ட பலகைகளை வைப்பதை, நகராட்சி ஊழியர்கள் நிறுத்தி வைத்திருந்தனர்."நாட்டின் சுதந்திரத்துக்காக தன் உயிரை நீத்தவர் பகத் சிங். இவரது தியாகத்தை, பாகிஸ்தானை உருவாக்கிய தலைவர் முகமது அலி ஜின்னாவே பாராட்டியுள்ளார். எனவே, தியாகி பகத் சிங் பெயரை, மேலும் தாமதப்படுத்தாமல் சூட்ட வேண்டும்' என, லாகூர் மேம்பாட்டு கழகம் உத்தரவிட்டுள்ளது."பகத் சிங் பெயர் சூட்டும் திட்டத்தை எப்படியாவது நிறுத்துவோம்' என, இங்குள்ள வியாபாரிகள் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...