நவ.4-ல் நடைபெற உள்ள அரசுப் பணியாளர் தேர்வுக்கான ஒரு மையம் இடமாற்றப்பட்டுள்ளது.
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 12.8.2012-ல் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த
சார்நிலைப் பணிகள் தேர்வு-1 மற்றும் குரூப் 7பி பணிகளுக்கான தேர்வுகள்
ரத்து செய்யப்பட்டன. இந்த
தேர்வுகள் மீண்டும் 4.11.2012-ல் தேர்வாணையத்தால்
நடத்தப்பட உள்ளன.
மதுரை வடக்கு வட்டத்தில் உள்ள நாராயணபுரம் எஸ்.இ.வி. மெட்ரிக். பள்ளி
மையத்தில் ஏற்கெனவே தேர்வு எழுதியவர்களுக்கு மட்டும், மாற்று மையமாக
கோ.புதூர் தி நொபிளி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுத ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
மற்ற மையங்களில் முன்புபோல் தேர்வு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது