இந்தியா கல்வி, படிப்பறிவில் மோசமாக உள்ளது என ஜனாதிபதி
பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். லூதியானாவில் நடந்த பள்ளி வளாக அடிக்கல்
நாட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஜனாதிபதி, கல்வியறிவில் ஏற்பட்டுள்ள
பற்றாக்குறை இந்தியாவுக்கு பெரும் சவாலாக உள்ளது. படிக்காத மக்கள் நிறைய
பேர் இந்தியாவில் உள்ளனர். தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன.
அதிலிருந்து அதிகம் திறமைசாலிகள் வந்துள்ளனர் என கூறினார்.