நர்சரி பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க புதிய வழிகாட்டு விதிமுறை

குழந்தைகளை நர்சரி பள்ளிகளில் சேர்க்க புதிய வழிகாட்டு விதிமுறைகளை ஒவ்வொரு பள்ளியும் அறிவிக்க வேண்டும் என்று மாநில கல்வி இயக்குனர் தெரிவித்தார்.இதுபற்றி நிருபர்களிடம் மாநில கல்வி இயக்குனர் அமித் சிங்லா கூறியதாவது:நர்சரி
வகுப்புக்களில் குழந்தைகளை சேர்ப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. அதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பள்ளியும் நர்சரி வகுப்பில் குழந்தைகளை சேர்ப்பதற்கான புதிய வழிகாட்டு விதிமுறைகளை அறிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 3 அல்லது 4 ஆண்டுகளாக இதில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வந்தாலும் இன்னும் நர்சரி வகுப்பில் குழந்தைகளை சேர்ப்பதில் இருக்கும் அவலம் தீரவில்லை. கடந்தகால அனுபவங்களையெல்லாம் கருத்தில் கொண்டுதான் புதிய வழிகாட்டு விதிமுறைகளை தயாரிக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இப்போதுள்ள வழிகாட்டு விதிமுறையில் எல்லா மாணவர்களுக்கும் இடமளிக்க வேண்டும் என்று இருக்கிறது. மேலும் நர்சரி மாணவர் சேர்க்கையில் எவ்வித வேறுபாடும் காட்டக் கூடாது என்றும் விதியுள்ளது. எனவே புதிய வழிகாட்டு விதிமுறையில் பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இப்போதுள்ள வழிகாட்டு விதிமுறையின்படி பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கையில் சுயாட்சி தன்மை வழங்கப்பட்டுள்ளது.மேலும் இந்த நர்சரி மாணவர் சேர்க்கையில் பல்கலைக்கழகங்களில் இருக்கும் மாணவர் சேர்க்கை போன்ற ஒரே மாதிரியான வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடிக்கலாம் என்று சிலர் தெரிவிக்கின்றனர்.

ஆனால் பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்படும் கல்லூரிகள், மாநில அரசின் நிதி உதவியை பெறுகின்றன. அதனால் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைகாக ஒரே மாதிரியான வழிகாட்டு முறையை எளிதில் கையாள முடியும். ஆனால் மாநிலம் முழுவதும் உள்ள எல்லா நர்சரி பள்ளிகளும் அரசு உதவியுடன் இயங்குபவை அல்ல. எனவே இதில் ஒரே மாதிரியான வழிகாட்டு முறையை மாநில முழுவதற்கும் அமல்படுத்த முடியாது. சில பள்ளிகள் மத்திய அரசு கல்வி திட்டத்தின் கீழ் இணைந்து செயல்படுகின்றன. சில பள்ளிகள் தனியாரால் நடத்தப்படுகின்றன. மேலும் பல பள்ளிகள் சுயாட்சி அதிகாரம் பெற்றவை. எனவே எல்லா பள்ளிகளையும் ஒரே விதியின் கீழ் கட்டுப்படுத்த இயலாது.எனவேதான் ஒவ்வொரு பள்ளியும் தனக்கென்று சில விதிமுறைகளை ஏற்படுத்திக் கொண்டு அதன் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. அதன்படி சில பள்ளிகள் சைவ உணவு சாப்பிடும் மாணவர்களை மட்டுமே சேர்த்துக் கொள்கின்றன. கடந்த ஆண்டு வழிகாட்டு விதிமுறையின்படி நர்சரி வகுப்புக்களில் குழந்தைகளை சேர்க்க குறைந்த பட்சம் அந்த குழந்தைக்கு 3 வயதுக்கு மேல் ஆகி இருக்க வேண்டும்.ஆனால் சில பள்ளிகள் 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை கூட நர்சரி வகுப்பில் சேர்த்துக்கொள்கின்றன. இப்படி நர்சரி வகுப்பில் மானவர்களை சேர்த்துக் கொள்வதற்கு வயது உச்ச வரம்பு எதுவும் கிடையாது.இதுபற்றியெல்லாம் ஆராய்ந்து புதிய வழிகாட்டு விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அமித் சிங்லா கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...