சிதம்பரம் எஸ்.பி.கோயில் தெருவைச் சேர்ந்த எஸ்.கோதண்டபாணி (17) என்ற மாணவர் சனிக்கிழமை சாலை விபத்தில் மரணமடைந்தார்.
÷இவரது கண்கள் தன்னார்வ ரத்ததானக் கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
÷இதற்கான ஏற்பாடுகளை
ரத்ததானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், நெய்வேலி மனிதநேய மேம்பாட்டு மைய நிறுவனர் கே.சி.தம்பி, ஓய்.ராஜாசிதம்பரம், ஆசைதம்பி ஆகியோர் செய்தனர்.