நிர்ணயித்த அளவை விட மிக அதிகளவில் நிலத்தடி நீரை
பயன்படுத்தும் மாநிலங்களாக ஆந்திரா, அரியானா, குஜராத்,
கர்நாடகா, பஞ்சாப்,
ராஜஸ்தான், தமிழகம், புதுச்சேரி பிரதேசம் கண்டறியப்பட்டுள்ளனநிலத்தடி
நீர்மட்டம் குறைந்து விட்டதால் இந்த 7 மாநிலங்களிலும், புதுச்சேரி யிலும்
80க்கும் மேற்பட்ட மண்டலங்கள், தாலுகாக்களில் கிணறுகள்வறண்டுவிட்டதாக, ஆணையம் கண்டறிந்துள்ளது
கட்டுப்பாடு: நிலத்தடி நீர் அபகரிப்பை தடுத்து, நிர்வகித்தலை ஒழுங்குபடுத்தும் நோக்கில், ஆணையம் இம்மாநிலங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுஅதன்படி, கலெக்டர்கள் அனுமதியின்றி, நிலத்தடி நீரை பயன்படுத்தும் புதிய குடிநீர் திட்டங்கள், கட்டமைப்புகளை எந்த ஒரு தனியார் அமைப்போ, நிறுவனமோ செய்யக்கூடாது அத்ததைய திட்டங்கள் நடைபெறவில்லை என்பதை, கலெக்டர்கள் அவ்வப்போது கண்காணித்து, அறிக்கை வழங்க வேண்டும்அதே நேரம், குடிநீர் மற்றும் வீட்டு உபயோகத்திற்காக கிணறு, ஆழ்துளை கிணறுகளில் மின்மோட்டார் களின்றி, "கை பம்புகள்' மூலம் குடிநீர் எடுக்க தடை இல்லை, என, மத்திய நிலத்தடி நீர் ஆணையம் தெரிவித்துள்ளது