பல்லடம்:பல்லடம்
ஒன்றியத் துக்கு உட்பட்ட அனைத்து குடியிருப்புகளிலும்
பள்ளி செல்லாக்
குழந்தைகள் கணக்கெடுக்கும் பணியில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தினர்,
ஆசிரியர்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி ஆசிரிய பயிற்றுனர்கள்
ஈடுபட்டனர்.இதில், 37 குழந்தைகள் நீண்ட விடுப்பு மற்றும் பள்ளி செல்லாக்
குழந்தைகளாக இருப்பது கண்டறியப்பட்டது. குழந்தை களின் பெற்றோர்களிடம் கல்வியின் அவசியம் குறித்து விளக்கி, அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டனர்.