அரசு பள்ளி மாணவர்கள் சாதனை


மதுரை திருப்பாலை அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர் விநாயகமூர்த்தி. இவர் டி.கல்லுப்பட்டியில் நடந்த மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் புதிய இந்தியாவின் கனவுகள் என்ற தலைப்பில் வித்தியாசமான ஓவியத்தை
வரைந்து 2ம் பரிசை பெற்றார். இதே பள்ளியைச் சேர்ந்த மாணவி மனோன்மணி, மேலூர் கல்வி மாவட்ட அளவில் நடந்த நடனப் போட்டியில் கிராமிய கலையான கரகாட்டம் ஆடி முதல் பரிசு பெற்றார். மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமையாசிரியை கிறிஸ்டோபர் ஜெயசீலன் தலைமை வகித்தார். கல்வி மாவட்ட அலுவலர் கஸ்தூரிபாய் பாராட்டினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராஜன், கவுன்சிலர் சண்முகப்பிரியா ஹோஸ்மின், ஊர் பிரமுகர் ராமமூர்த்தி, ஆசிரியர்கள் தமிழரசி, சந்திரசேகர், ரேவதி ஆகியோர் கலந்துகொண்டனர். உதவித்தலைமை ஆசிரியை மஞ்சுளா நன்றி கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...