இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விடிய விடிய
நடந்தது. இதில் நாளை அவர்களுக்கு பணிநியமன ஆணையினை முதல்வர் ஜெயலலிதா
தலைமையில் நடக்கும் விழாவில் வழங்கப்பட உள்ளது.
கடந்த ஜூலை , அக்டோபர் மாதங்களில் டி.ஆர்.பி. சார்பில் ஆசிரியர்கள் பணிக்கான டி.இ.டி. தேர்வு
நடந்தது. இதில் தேர்வு பெற்றவர்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு கடந்த
9-ம் தேதி முதல் நடந்து வருகிறது. ஏற்கனவே நடந்த கலந்தாய்வில் 6,500
ஆசிரியர்கள் சொந்த மாவடங்களில் பணி நியமனம் பெற்றனர். கடந்த ஜூலை , அக்டோபர் மாதங்களில் டி.ஆர்.பி. சார்பில் ஆசிரியர்கள் பணிக்கான டி.இ.டி. தேர்வு
இதையடுத்து தொடக்க கல்வித்துறையில் 9,664 இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நேற்று துவங்கி விடிய விடிய நடந்து. டி.ஐ.டி. தேர்தவில் 9,664 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 8,718 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 18 ஆயிரத்து, 382 ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதாலும், நாளை சென்னையில் நடக்க உள்ள பணிநியமன ஆணைய வழங்கும் விழா முதல்வர் ஜெ. தலைமையில் நடப்பதாலும் நேற்று துவங்கிய கலந்தாய்வு பணிகள் விடிய விடிய நடத்தி முடித்துள்ளது டி.ஆர்.பி. அதிகாலை 3 மணிவரை இந்த கலந்தாய்வு நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த கலந்தாய்வின் போது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.தேர்வு பெற்றவர்கள் குறித்த விவரங்கள் உடனடியாக இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
நாளை பணிநியமன ஆணை வழங்கும் விழா நடக்க உள்ளதால் இதற்கான ஏற்பாடுகள், மும்முரமாக நடந்து வருகின்றன.தேர்வு பெற்ற ஆசிரியர்கள் அனைவரும், சென்னைக்கு வர வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும், 13ம் தேதி காலையில், சென்னையில் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.