*பார்ப்பவர்களுக்கு தோன்றலாம்....வேலை கிடைத்து விட்டது ...பிறகு ஏன் கூச்சல்,கூட்டம்,தீர்மானம் ,இயக்கம் என்று ....வரலாற்றிலேயே இல்லாத மிகப்பெரிய தண்டனை ....
*நான்கு ஆண்டுகளாக மாவட்ட மாறுதலில் கலந்துகொள்ளாத
நிலைமை.இன்னும் எத்தனை ஆண்டுகளோ !!!!*படித்து முடித்தவுத்தனா வேலை கிடைத்தது....இல்லையே ...பல ஆண்டுகளுக்கு பிறகு வேலை கிடைத்தது ...சரி ...கிடைத்த வேலையைவேண்டாம் என்று சொல்லவா முடியும்.மனிதனுக்கு வாழ்வாதாரமே வேலை பார்ப்பது தானே!!
*வேலை!!! வேலை !!!!என்பீர்கள் ....வேலை கிடைத்தவுடன் கொடி பிடிப்பீர்கள் ....என்று எண்ணுகிறீர்களா !!! சரி! உங்கள் கூற்று படி ,ஓராண்டு குடும்பத்தை விட்டு பிரியலாம் !!ஈராண்டு குழந்தைகளை விட்டு பிரியலாம் !!!நான்கு ஆண்டுகள் .....எங்களின்குழந்தைகள் ,மனைவி ஒரு புறம் ,நாங்கள் ஒருபுறம் ..... உள்நாட்டிலேயே அகதிகளாய் வாழ்ந்து வருகிறோம்.
*காரணம் என்ன ????
வழக்கு நிலுவையில் உள்ளது .இதுதான் அரசின் பதில் !!!!
*மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்பார்கள்!!அதற்கு சான்று சமீபத்தில் நடந்த பணி நியமனங்கள் ....உயர்நீதி மன்றத்தில் எத்தனையோ வழக்குகள்!!ஆனால் அரசு நினைத்த முடிவினை அவற்றை எல்லாம் தாண்டி பணி நியமனம்.
முடிவாக அரசு நினைத்தால் .......
பின்குறிப்பு:தற்போது நியமனம் செய்யப்பட்ட ஏறத்தாழ 9500 இடைநிலை ஆசிரியர்களுக்கு வழக்கு முடியும் வரை இதே நிலைதான்...உங்களுக்கு தெரிந்தவர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பணி நியமனம் பெற்றவர்களுக்கு தெரிவியுங்கள் .இயக்கத்தை வளர்ப்பதற்கு அல்ல ஒரு மனிதாபிமானத்தோடு ........-பொதுச்செயலாளர்