மருத்துவ கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள்: அமைச்சர் திடுக் தகவல்

நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சுமார் 17 கல்லூரிகளில் போலி மருத்துவ ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் லோக்சபாவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: நாடு முழுவதும் பல்வேறு மருத்துவ கல்லூரிகளில்
போலி மருத்துவர்கள் ஆசிரியர்களாக பணி புரிந்து வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ கல்லூரிகளுக்கும் விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சில வழக்குகளில் சி.பி.ஐ., பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது என கூறிய அமைச்சர் மருத்துவ கவுன்சில் அமைப்பில் இருந்து சம்பந்தப்பட்ட மருத்துவர்களின் பெயரை நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவி்த்தார்.

மேலும் 1999-ம் ஆண்டு நிறை‌வேற்றப்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கான சட்டதிட்டங்களின் படி பட்டபடிப்பு, பட்ட மேற்படிப்பு ஆகியவற்றில் போலியான ஆசிரியர்கள் நியமனம் கண்டுபிடிக்கப்பட்டால் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு புதுப்பித்தலை நிறுத்திவைக்க வேண்டும் எனவும், இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்பின் இணைய தளத்தி்ல் மருத்துவகல்லூரிகளின் எண்ணிக்கை மற்றும் தேவைப்படும் மருத்துவர்களின் விபரங்களை வெளியிட்டு முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...