சென்னையில் ஆசிரியர்கள் இன்று சாலை மறியலில்
ஈடுபட்டனர். சென்னை சேத்துப்பட்டு அருகே சாலை மறியலில் ஈடுபட்ட அவர்கள்,
ஆசிரியர் கலந்தாய்வில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி மறியலில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி
பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இன்று துவங்கியது. இதில் கலந்து கொள்ள வந்திருந்தவர்களுக்கு சென்னைப் பகுதியில் இடம் காலி எதுவும் இல்லை என்று கூறப்பட்டதால் ஆத்திரம் அடைந்த அவர்கள், சேத்துப்பட்டு ஹாரிங்க்டன் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். முன்னதாக காலி இடம் என்று கூறி கலந்தாய்வுக்கு வந்ததாகவும், வந்த பிறகு, சென்னையில் காலியிடம் இல்லை என்று அறிவிக்கப்பட்டதாகவும் புகார் தெரிவித்தனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி
பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இன்று துவங்கியது. இதில் கலந்து கொள்ள வந்திருந்தவர்களுக்கு சென்னைப் பகுதியில் இடம் காலி எதுவும் இல்லை என்று கூறப்பட்டதால் ஆத்திரம் அடைந்த அவர்கள், சேத்துப்பட்டு ஹாரிங்க்டன் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். முன்னதாக காலி இடம் என்று கூறி கலந்தாய்வுக்கு வந்ததாகவும், வந்த பிறகு, சென்னையில் காலியிடம் இல்லை என்று அறிவிக்கப்பட்டதாகவும் புகார் தெரிவித்தனர்.