ஜனவரி 3 & 4 தேதிகளில் விஏஓ பணிக்கான கலந்தாய்வு

கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கான கலந்தாய்வு ஜனவரி 3 மற்றும் 4-ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 244 மையங்களில் 3, 500 தேர்வுக் கூடங்களில் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தேர்வு,
கடந்த செப்டம்பர் 30ம் தேதி நடைபெற்றது.
இதை சுமார் 10 லட்சம் பேர் எழுதினர். அதிகபட்சமாக சென்னையில் 259 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 1870 பணியிடங்களுக்காக இந்த தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தியது.
இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான கலந்தாய்வு ஜனவரி மாதம் 3 மற்றும் 4-ம் தேதியில் நடைபெறுகிறது. மேலும் இது குறித்த விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...