10, பிளஸ் 2 பொது தேர்வு தேதி அறிவிப்பு

பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பிற்கு நடத்தப்படும் பொதுத் தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12ம் வகுப்பிற்கு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் 27-ம் தேதி வரை தேர்வு நடைபெற
உள்ளது. மார்ச் ஒன்றாம் மற்றும் 4ம் தேதி மொழித்தாள் தேர்வுகள் நடைபெறுகின்றன. ஆங்கிலத்தாள் மார்ச் 6 மற்றும் 7ம் தேதிகளிலும், இயற்பியல் மற்றும் பொருளியியல் தேர்வுகள் 11ம் தேதியும் நடைபெற உள்ளன. மார்ச் 14ம் தேதி கணக்கு, விலங்கியல் மற்றும் நுண் உயிரியல் தேர்வுகளும், 15ம் தேதி வணிகவியல் தேர்வும் நடைபெறுகிறது. வேதியியல, கணக்கியல் தேர்வுகள் 16ம் தேதியும், உயிரியியல், வரலாறு, வணிக கணிதம் தேர்வுகள் 21ம் தேதி நடைபெற உள்ளது.

12ம் வகுப்பு தேர்வை 8லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுத உள்ளனர். 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்கத் துறை தெரிவித்துள்ளது.

பத்தாம்‌ வகுப்பிற்கான தேர்வு மார்ச் 27-ம் தேதி துவங்கி ஏப்ரல் மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொழித்தாள்கள் இரண்டும் 27 மற்றும் 28ம் தேதி நடைபெறுகிறது. ஆங்கிலத் தாள்கள் இரண்டும் ஏப்ரல் ஒன்று மற்றும் 2ம் தேதிகளில் ந‌டைபெற உள்ளது. 5ம் தேதி கணித தேர்வும், 8ம் அறிவியலும், 12ம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்கத் துறை அறிவித்துள்ளது. இத்தேர்வை 10 லட்சம் பேர் எழுத உள்ளனர் என அரசு அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...