குரூப் 1 தேர்வில் அதிரடி மாற்றம் மெயின், நேர்முக தேர்வுகளில் மதிப்பெண் அதிகரிப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், வணிகவரி உதவி
கமிஷனர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், பத்திரப்பதிவு மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு அதிகாரி (டி.எப்.ஓ.) ஆகிய 8 விதமான உயர்பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக குரூப் 1 தேர்வை நடத்துகிறது.

குரூப் 1 தேர்வு முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முக தேர்வு என 3 நிலைகளை உள்ளடக்கியது. இதுவரை முதல்நிலை தேர்வில் பொது அறிவு தொடர்பாக 200 வினாக்கள் கேட்கப்படும். மெயின் தேர்வில் பொது அறிவில் தலா 2 தாள்கள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் 300 மதிப்பெண். நேர்முகத்தேர்வுக்கு 80 மார்க் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், குரூப் 1 தேர்வில் டிஎன்பிஎஸ்சி அதிரடியாக பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி, முதல்நிலை தேர்வில் பொது அறிவில் புதிதாக ‘ஆப்டிடியூட்‘ என்ற பாடம் சேர்க்கப்படுகிறது. ஆப்டிடியூட் என்பது ஒருவரின் சிந்தனைத்திறன்,

 பொதுவிழிப்புணர்வு, பகுத்து ஆராயும் திறன் சம்பந்தப்பட்டது. பொது அறிவில் கேள்விகள் 150 ஆக குறைக்கப்பட்டு எஞ்சிய 50 கேள்விகள் ஆப்டிடியூட் பாடத்தில் இருந்து கேட்கப்படும். முதல்நிலை தேர்வை போன்று மெயின் தேர்விலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது, கூடுதலாக 300 மார்க்குக்கு பொது அறிவு தாள் ஒன்று புதிதாக சேர்க்கப்படுகிறது. அதோடு பொது அறிவில் ஆங்கில பாடமும் (கட்டுரை எழுதுதல், சுருக்கி வரைதல் போன்றவை) புதிதாக இடம் பெறுகிறது. விண்ணப்பதாரரின் ஆங்கில மொழித்திறனை சோதிக்கும் வகையில் இதில் கேள்விகள் கேட்கப்படும்.

மெயின் தேர்வில் புதிதாக 300 மார்க்குக்கு கூடுதலாக ஒரு தாள் சேர்க்கப்பட்டு இருப்பதால் மெயின் தேர்வுக்கான மொத்த மதிப்பெண் 600லிருந்து 900 ஆக உயர்ந்து விடும். தற்போது, நேர்முகதேர்வுக்கு 80 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது 120 ஆக அதிகரிக்கப்படும். இந்த ஆண்டுக்கான குரூப் 1 தேர்வு வரும் 27ந்தேதி நடைபெறுகிறது. இதில் புதிய முறை அமல்படுத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. வரும் 27ம் தேதி நடைபெறும் குரூப் 1 தேர்வில் 8 துணை கலெக்டர்கள், 4 டிஎஸ்பி, 7 வணிகவரி உதவி கமிஷனர், 1 மாவட்ட பதிவாளர், 5 மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரிகள் என மொத்தம் 25 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...