211 பல்கலை பணியிடங்களுக்கு 15 ஆயிரம் பேர் விண்ணப்பம்

மதுரை காமராஜ் பல்கலையில் எழுத்தர் உட்பட காலியாக உள்ள 211 பணியிடங்களுக்கு, 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இப்பல்கலையில், 176 எழுத்தர், 35 வாட்ச்மேன், துப்புரவு மற்றும் தோட்டப்
பணியாளர் என, 211 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், டிச.,28 வரை பெறப்பட்டன. இதில், 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதுகுறித்து துணைவேந்தர் கல்யாணி கூறுகையில், ""எதிர்பார்த்ததைவிட ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. உரிய ஆய்வுக்குபின் தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். தேர்வு செய்யும் முறை குறித்து ஆலோசிக்கப்படுகிறது விரைவில் அறிவிக்கப்படும்,'' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...