கல்வித்துறை உத்தரவு மாலை சிறப்பு வகுப்புகளை 5 மணிக்குள் முடிக்க வேண்டும்


பள்ளிகளில் மாலை நேர சிறப்பு வகுப்புகளை 5 மணிக்குள் முடித்து மாணவிகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவி இறந்த சம்பவத்துக்கு பின், தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் உட்பட பெண்கள் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, பள்ளிகளில் நடைபெற்று வரும் மாலை நேர சிறப்பு வகுப்புகளும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு மாணவ, மாணவிகளை தயார் செய்ய காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகளை பள்ளிகள் நடத்துகின்றன. சில பள்ளிகளில் இரவு 8 மணி வரை சிறப்பு வகுப்பு நடத்தப்படுவதாக தகவல் வந்துள்ளது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, போக்குவரத்து வசதி கருதி மாலைநேர சிறப்பு வகுப்புகளை மாலை 5 மணிக்குள் முடித்து அவர்களின் இருப்பிடங்களுக்கு பத்திரமாக அனுப்பி வைக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் வாயிலாக பள்ளி தலைமை ஆசிரியர்கள், தனியார் பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...