சென்னையில் பள்ளி, கல்லூரி நேரத்தை மாற்ற பரிந்துரை

சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளின் நேரத்தை மாற்ற சென்னை போக்குவரத்துத் துறை செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.
கந்தன்சாவடியில் பேருந்து மீது லாரி மோதியதில் மாணவர்கள்
பலியான சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், இன்று சென்னை போக்குவரத்து துறை செயலாளர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், சென்னையில் பள்ளி துவங்கும் நேரத்தை காலை 7.30 மணிக்கும், கல்லூரி துவங்கும் நேரத்தை கால 8 மணிக்கும் மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் நடந்த பிறகு அதாவது கடந்த 26ம் தேதி முதல் கூடுதலாக காலை நேரத்தில் 264 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், சாலைகளில் போக்குவரத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...