செய்முறைத் தேர்வு : அதிகாரி விளக்கம்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு செய்முறைத் தேர்வில், குறைந்தபட்ச மதிப்பெண்கள் குறித்து, தேர்வுத்துறை விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து, தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிளஸ் 2

செய்முறை பாட தேர்வில் தேர்ச்சி பெற, செய்முறையில், குறைந்தபட்சம், 30 மதிப்பெண்களும், எழுத்துத் தேர்வில், 40 மதிப்பெண்களும் பெற வேண்டும் என்ற நிலை, முதலில் இருந்தது. இந்த நடைமுறை, தற்போது இல்லை. அறிவியலில், அதிக மாணவர்கள் தோல்வி அடைவதை கருத்தில் கொண்டு, செய்முறை தேர்வில், 50க்கு, 40 மதிப்பெண்களும், எழுத்து தேர்வில், 150க்கு, 30 மதிப்பெண்களும் எடுத்தாலே, தேர்ச்சி என்ற நிலை தான், சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. பத்தாம் வகுப்பு, அறிவியல் செய்முறைத் தேர்விற்கு, எழுத்து தேர்வில், 75க்கு, 20 மதிப்பெண்களும், செய்முறைத் தேர்வில், 25க்கு, 15ம் எடுக்க வேண்டும். இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...