தேசிய அளவிலான கட்டுரை போட்டியில் பார்வையற்ற இணை பேராசிரியர் முதலிடம்


தேசிய அளவிலான கண் பார்வையற்றவர்களுக்கான போட்டியில், தர்மபுரி கல்லூரி இணை பேராசிரியர் முதல் பரிசு பெற்றார். அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு சார்பாக, கடந்த டிசம்பர் மாதம் கட்டுரை போட்டி நடந்தது. இதில், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி இணை
பேராசிரியர் கண்ணன், "எதிர் காலத்தில் வாய்ப்புக்களும், சாவல்களும்' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைக்கு முதல் பரிசு பெற்றது.

இது குறித்து கண் பார்வையற்ற இணை பேராசிரியர் கண்ணன் கூறியதாவது: நான் தர்மபுரி வேடியப்பன் திட்டை சேர்ந்தவன். பிறவியில் இருந்தே கண் பார்வையில்லை. ஆனாலும், என் பெற்றோர் கோபால், கண்ணம்மாள் ஆகியோர் என்னை படிக்க வைக்க ஆர்வம் காட்டினர். தொடக்கல்வியை பர்கூர் ஐ.இ.எல்.சி., பார்வையற்றோர் பள்ளியிலும், தாம்பரம் கார்லி மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 மற்றும் சென்னை கிறிஸ்துவ கல்லூரியில், பி.ஏ., எம்.ஏ., தமிழும், திருச்சி பாரதிதாசன் பல்கலையில், பி.ஹெச்.டி., படித்தேன். கடந்த, 1994 டிசம்பர், 12ம் தேதி தர்மபுரி அரசு கல்லூரியில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்தேன். பணியில் சேர்ந்ததில் மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுத்ததுடன், அவர்களுக்கு எதிர்காலத்தில் கிடைக்க கூடிய வாய்ப்புக்களையும், அதை அவர்கள் அடைவதற்கான வழிமுறைகளையும் கற்று கொடுத்து வந்தேன்.
கடந்த, 2010ம் ஆண்டு முதல் தமிழ்த்துறை இணை பேராசிரியாக பதவி உயர்வு கிடைத்தது. அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு சார்பாக தேசிய அளவில் கட்டுரை போட்டி நடந்தது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த கட்டுரை போட்டியில், "எதிர்காலத்தில் வாய்ப்புக்களும் சவால்களும்' என்ற தலைப்பிலான கட்டுரையை அனுப்பி வைத்தேன். இக்கட்டுரை தேசிய அளவில் முதல் இடத்தை பிடித்தது. அதற்கான சான்றிதழ் மற்றும் பரிசு தொகை, 10 ஆயிரம் ரூபாய் வழங்கினர்.
இவ்வாறு கூறினார். கட்டுரை போட்டியில் முதல் பரிசு பெற்ற இணை பேராசிரியர் கண்ணனுக்கு, கல்லூரி முதல்வர் (பொ)அன்பரசு பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ,மாணவியர் வாழ்த்து தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...