அமைச்சரை முற்றுகையிட்ட மாணவர்கள்

ஆய்வுக்கு வந்த ஆதி திராவிட நலத்துறை அமைச்சரை மாணவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வால்பாறை அரசு கலைக்கல்லூரி விடுதி, மாணவர் விடுதி மற்றும் மாணவியர் விடுதியை
ஆய்வு செய்ய தமிழக ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் சுப்ரமணியன் வந்தார். ஆண்கள் விடுதியில் அமைச்சர் ஆய்வு செய்த போது, உணவு சரிவர சமைத்துக் கொடுப்பதில்லை, விடுதியில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை எனக்கூறி மாணவர்கள் அமைச்சரை முற்றுகையிட்டனர். வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதிமொழி அளித்ததை தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.மாணவர்கள் புகாரைத் தொடர்ந்து விடுதி வார்டன் அருள் மணியை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய அமைச்சர் உத்தரவிட்டார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...