SSTA-வாரம் ஒரு உடல்நலத்தகவல் -கண்புரைக்கு அறுவை சிகிச்சை தேவைப்படாத புதிய மருந்து

காட்ராக்ட் (cataract) என்று அழைக்கப்படும் கண் லென்சில் புரை ஏற்பட்டு பார்வையை மறைக்கும் கண்பார்வை நோய்க்கு அறுவை சிகிச்சை செய்யாமலே மருந்து மூலம் குணப்படுத்த முடியும் என்று ஆஸ்ட்ரேலிய ஆராய்ச்சியாளர்கள் சிலர் தங்கள் ஆய்வு
முடிவை வெளியிட்டுள்ளனர்.

கால்பெயின் என்ற புரதம் உருவாகி அது நம் கண் லென்சை மறைத்து இதனால் பார்வையிழப்பு ஏற்படுவது காடராக்ட் ஆகும். இந்தப் புரதம் ஏன் உருவாகிறது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. வயதாவதால் இது பெரும்பாலும் ஏற்படுகிறது.

இந்த கண்படல பார்வையிழப்பு நோய்க்கு தற்போது ஒரே சிகிச்சை அறுவை சிகிச்சைதான். அதாவது பாதிக்கப்பட்ட அந்த லென்சை நீக்கி விட்டு செயற்கை லென்சைப் பொறுத்துவர்.

தற்போது அடிலெய்ட் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் கண் லென்சை மறைக்கும் புரதத்தில் நேரடியாக வேலை செய்யும் மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக கோருகின்றனர்.

கண் திசுவில் உருவாகும் கால்பெயின் என்ற புரதத்தை இந்த மருந்து குறிவைக்கும். இது முதற்கட்ட பரிசோதனைகளில் வெற்றியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னமும் இது மனிதர்களில் சோதனை செய்யப்படவில்லை.

அதாவது இது மருத்துவ கவுன்சிலால் ஒத்துக் கொள்ளப்பட்டு மனிதர்களுக்கு ஆபத்தில்லாமல் காட்ராக்டை போக்கும் என்றால் சொட்டு மருந்து அல்லது கிரீம் வடிவத்தில் தினமும் இரவு படுக்கச் செல்லும் முன் குறிப்பிடப்பட்ட கண்ணில் இதனை அப்ளை செய்தால் போதும் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

இந்த மருந்தை பயன்படுத்தி வந்தால் கண்பார்வையியல் நிபுணர்கள் மிகவும் முன் கூட்டியே உங்களுக்கு காட்ராக்ட் வருமா வராதா என்று கூறிவிடமுடியும்.

ஒரு கண்ணில் காட்ராக்ட் இருக்கிறது இதனால் மற்றொரு கண்ணிலும் காட்ராக்ட் வரும் என்று நினைத்தால் இரண்டு கண்களிலும் இந்த மருந்தை அப்ளை செய்யலாம் இதன் மூலம் காட்ராக்ட் உருவாவதை தடுக்கவோ அல்லது அதனை தாமதப்படுத்தவோ முடியும் என்று கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...