மனஅழுத்தத்தைப் போக்க வழி என்ன?-SSTA EXCLUSIVE

மன அழுத்தத்தைக் கையாள்வதற்கு நம்முடைய மனதின்சிந்தனைகளைதூய்மைப்படுத்த வேண்டும். எதிர்மறைச்சிந்தனைகள் பெரும்பாலும் மனஅழுத்தத்தையேஅளிக்கின்றன. எனவே நல்ல சிந்தனைகளைவளர்த்துக்கொள்வதன் மூலம் மன அழுத்தத்தைக் கையாளமுடியும்.

அமைதியான குடும்பச் சூழல் பெரும்பாலான மனஅழுத்தத்தைக்குறைக்கிறது. அலுவலகத்தின்குழப்பங்களையோ, எரிச்சல்களையோகுவிக்கும் இடமாககுடும்பம் இருக்கக் கூடாது, மாறாக அவற்றைஅழிக்கும்இடமாகவே குடும்பம் இருக்க வேண்டும் என்பதனைகுடும்பத்தினர் புரிந்துகொள்ளவேண்டும். குடும்பத்தில்நுழைந்தவுடன் மனம் மகிழ்ச்சியடையும்வகையில்குடும்பத்தினரோடு அன்பான வாழ்க்கை வாழ்தல்மிகவும்முக்கியம்.

எத்தனை இறுக்கமான சூழலாக இருந்தாலும் சிரிக்கக் கற்றுக்கொண்டால்பிரச்சனைகள் பல காணாமல் போய்விடும். நல்லநகைச்சுவைஉரையாடல்களை வளர்த்துக் கொள்ளுங்கள். இதுஇரத்த அழுத்தத்தைக்கட்டுக்குள் வைக்கும். தசைகளைஇறுக்கமற்ற நிலைக்கு கொண்டு செல்லும். நுரையீரலுக்குசுத்தமான காற்றை கொண்டு செல்லும் எனவேமனஅழுத்தத்தைக் குறைக்க சிரியுங்கள் என்கிறார் மனோதத்துவ நிபுணர் லீபெர்க்.

குடும்பங்களில் பிரச்சனைகள் வருவது சகஜம். கணவன்மனைவியரிடையேபிரச்சனை வரும்போது ‘உன்னால் தான்வந்தது’ என்று பழியை மாறி மாறிசுமத்தாமல் ‘நமக்குபிரச்சனை இருக்கிறது’ எப்படி தீர்வு காண்பதுஎனும்கண்ணோட்டத்தில் பேச வேண்டும் என்கிறான் பிரபலஅமெரிக்கஉளவியலாளர் வில்லார்ட் எஃப் ஹார்லே.

மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்.
* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே 
எழுந்துவிடுங்கள்.
* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரியஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டியபணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும்குறித்து வையுங்கள்.
* காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தைகையில்வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும்.தேவையற்ற மன அழுத்தத்தைக்குறைக்கும்.
* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தைஅதிகரிக்கும். செய்யவேண்டியதை தாமதப் படுத்தாமல்செய்யுங்கள்.
* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம்வரைகாத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.
* வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்யமுயலுங்கள் காலணிஆனாலும் கடிகாரம் ஆனாலும்.இல்லையேல் அவை தேவையற்ற மனஅழுத்தத்தைத் தரக்கூடும்.
* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்துநிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்குமுன்பாகவே புறப்படுங்கள்.
* காஃபி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம்வேண்டாம்
* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள்.உதாரணமாக பஸ்தாமதமானால் இதைச் செய்வேன்… என்பதுபோன்றவை.
* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ,தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.
* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டேஇருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்துமகிழுங்கள்.
* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியைமுதலிலேயேதெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
* சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும்அணைத்துவிடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும்இன்றி.
* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம்செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால்‘மன்னிக்கவும்.. என்னால்செய்ய இயலாது’ என்று சொல்லப்பழகுங்கள்.
* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மனஇறுக்கம்கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவுஅவசியம்.
* எளிமையாக வாழுங்கள்.
* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.
* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துதூங்குங்கள். தடையற்றதூக்கத்துக்கு அது உதவும்.
* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காகஅடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாதபொருள் மன அழுத்தம் தரும்.
* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.
* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை,தோல்விகளை குறைக்கஎழுத்து வடிகாலாகும்.
* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல்நம்பிக்கைக்குரியநண்பர்களிடம் பகிருங்கள்.
* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள்எதையேனும் ஒன்றைச்செய்யுங்கள். அதில் பொருளாதாரப்பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.
* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும்அனைத்துசெயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடுசெய்யுங்கள்.
* என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும்முனகல்களைத் தவிர்த்துபிறரைப் புரிந்து கொள்ளமுயலுங்கள்.
* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கைமிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதேதன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பதுநிரூபிக்கப்பட்டஉண்மை.
* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள்.ஒவ்வொருவேலைக்கும் இடையே சரியான இடைவெளிவிடுங்கள்.
* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச்செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வதுஎன மனதைபுத்துணர்ச்சியாக்குங்கள்.
* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள்செவ்வனேநடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்துவிடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமானவேலைகள் மனதைஇலகுவாக்கும்.
* மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்,அடுத்தவர்களைக்காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.
இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்றவாழ்க்கை நமக்குவசப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...