பள்ளிகளில் சமையலறைக்கு ரூ.360 கோடி

தமிழகத்தில், 14,130 பள்ளிகளில், வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் கட்டுவதற்கு, 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் செய்திக்குறிப்பு: அரசு பள்ளிகளில் பயிலும்

மாணவர்களுக்கு, மதிய உணவு வழங்கப்படுகிறது. அரிசி, பருப்பு, முட்டை, பழங்கள் போன்ற உணவுப் பொருட்கள் கெடாமல் பாதுகாக்க, முதல்கட்டமாக, 21,990 பள்ளிகளில், வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இதை தொடர்ந்து, மேலும், 14,130 பள்ளிகளில் வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் கட்டும் பணிக்காக, 360 கோடி ரூபாய்க்கு, நிர்வாக ஒப்புதல் வழங்கி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...