தொடர் போராட்டம் எதிரொலி: அண்ணாமலைப் பல்கலைக்கு காலவரையற்ற விடுமுறை

இலங்கை அதிபர் ராஜபட்சேவை கண்டித்து மாணவர்கள் ஈடுபட்டு வரும் தொடர் போராட்டம் எதிரொலியாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு மறுதேதி அறிவிக்கும் வரை காலவரையற்ற
விடுமுறை விடப்பட்டுள்ளதாக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு பத்திரிகை குறிப்பில் கூறியிருப்பதாவது: மாணவர்கள் தொடர் போராட்டம் காரணமாக மருத்துவம், பல் மருத்துவப் புலங்களை தவிர, ஏனைய அனைத்து புலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை விடுபட்டுள்ளது என துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...