தற்செயல் விடுப்பு விதிகள்

தற்செயல் விடுப்பு
1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள்
தற்செயல் விடுப்பு வழங்கப்படும்.
ஒரே நேரத்தில் பத்து நாட்கள்
தனியாகவோ ,
அரசு விடுமுறை அல்லது ஈடுசெய்யும்
விடுப்பு முதலியவற்றுடன்
சேர்த்தோ அனுபவிக்கலாம்.
2. அவ்வாறு நாட்கள்
தொடர்ந்து அனுபவிக்கும் போது ,
இயற்கை சீற்றம், தேசிய தலைவர்
மரணம் , பந்த், பண்டிகை, திடீர்
விடுமுறை காரணமாக 11 வது நாள்
அரசு விமுறை என
அறிவிக்கப்பட்டால் ஊழியர் 10
க்கு மேற்பட்ட அந்த நாளையும்
விடுப்பாக அனுபவிக்கலாம்.
(அ.நி.எண். 309 ப.ம.நி.சி.(அவி.11)
நாள் 16.08.93)
3. தற்செயல் விடுப்பை ஈட்டிய
விடுப்பு மற்றும் பிற முறையான
விடுப்புடன்
இணைத்து அனுபவிக்க இயலாது.
4. தற்செயல்
விடுப்பு விண்ணப்பத்தில் அதற்கான
காரணத்தை குறிப்பிட
வேண்டியதில்லை. (அ.க.எண். 1410
ப.ம.நி.சீ துறை 2.12.77 ).
5. தற்காலிக பணியாளர் மற்றும்
தகுதிகாண்பருவத்தினருக்கு 3
மாதங்களுக்கு 2 நாட்கள் என்ற
அளவில்
இவ்வுடுப்பு வழங்கப்படும். (அவி.
இணைப்பு VI )
6. தகுதிகாண்பருவம் முடித்தவர் /
நிரந்தர பணியாளர்
ஆண்டு துவக்கத்திலேயே பணிநிறைவு பெரும்
பணியாளருக்கு 12 நாட்கள்
தற்செயல்
விடுப்பை ஆண்டு துவக்கத்திலேயே வழங்கலாம்.
(அரசு கடித எண். 61559 /82 -4
ப.ம.சீ துறை நாள். 17.1.83)
7. குறைந்தபட்சம் அரைநாள்
சிறுவிடுப்பு அனுமதிக்கப்படும்.
8. அவசர காரணங்களுகளுக்காக
முதலில்
விடுப்பு எடுத்து விட்டு பின்னர்
இதற்கான
விண்ணப்பத்தினை அளிக்கலாம்.
( அரசுக் கடிதம் 61559 /82 -4
ப.ம.சீ துறை நாள். 17.1.83)
THANKS TO Munuswamy Muns

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...