அரசு பள்ளி ஆண்டு விழா

எஸ்.புதூர் அருகே உள்ள கொண்டபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில்  52 ஆவது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.
  விழாவிற்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ரெங்கசாமி தலைமை
வகித்தார். தலைமை ஆசிரியர் சுகந்தி வரவேற்றார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் வி.எஸ்.ராஜன் முன்னிலை வகித்தார்.
  விழாவையொட்டி காலையில் விளையாட்டு விழாவும், மாலையில் பள்ளி மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஒன்றியக் குழுத் தலைவர் ராஜமாணிக்கம் பரிசுகளை வழங்கினார்.
  விழாவில் ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், ஊராட்சி மன்றத் தலைவர் காந்திமதி, ஒன்றியக் கவுன்சிலர் செல்லம் குமாரவேல், கிராமக் கல்விக் குழுத்  தலைவர் கவிதா, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் ஈட்டி.கோன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் தனலெட்சுமி மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.   இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் செய்புநிஷா, ஜெயஸ்ரீ, தமிழரசி, சசிகுமார், செல்லப்பா ஆகியோர் செய்திருந்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...