மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆலோசனைக் கூட்டம்

உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான நலப்பணியாளர்கள் பணி விபரம் மற்றும் திட்ட செயல்பாடுகள் குறித்த
ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
வட்டார வளர்ச்சி அலுவலர் ஏகாம்பரம் தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் மனோகரன், மாற்றுத் திறனாளிகளுக்கான நலப்பணியாளர்களின் பணி மற்றும் திட்ட செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு நிறுவனர் ரமேஷ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இதில் உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் இருந்து 54 மற்றும் திருநாவலூர் ஒன்றியத்தில் இருந்து 44 நலப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...