பரமக்குடியில் கட்டாயக் கல்வி விழிப்புணர்வுப் பேரணி

 பரமக்குடி வட்டார வளமையம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  பேரணியை நகர்மன்றத் தலைவர் எம். கீர்த்திகாமுனியசாமி துவக்கி
வைத்தார்.  வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆர். பாஸ்கரன் வரவேற்றார். அலங்கார மாதா உயர்நிலைப் பள்ளியில் துவங்கிய இப்பேரணி ஐந்துமுனை சந்திப்பு, காந்திஜி ரோடு,  பெரியகடை வீதி, காந்தி சிலை, மதுரை மண்டபம் சாலை வழியாக வந்து மீண்டும்  பள்ளியை வந்தடைந்தது.
 இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...