9 ம் வகுப்பு தேர்வில் 10 ம் வகுப்பு வினாக்கள்: வினாத்தாளில் இப்படியும் குளறுபடி


திண்டுக்கல் மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு, ஆங்கிலம் இரண்டாள் தாள் வினாத்தாளில், 10 ம் வகுப்பு பாடத்தில் இருந்து வினாக்கள்
கேட்கப்பட்டன.

ஒன்பதாம் வகுப்பு முழு ஆண்டு தேர்விற்கு, மாவட்ட அளவில், பொது கேள்வித்தாள் தயாரிக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில், நேற்று, ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நடந்தது.

அதிர்ச்சி: எண் 1 முதல் 7 வரை வினாக்கள், 10ம் வகுப்பு பாடத்தில் இருந்து கேட்கப்பட்டன; இவற்றிக்கு 35 மதிப்பெண். மாணவர்கள் விடையளிக்க முடியாமல் குழப்பம் அடைந்தனர்.

ஆங்கில ஆசிரியர் ஒருவர் கூறுகையில்,"கேள்வித்தாள் தயாரித்த ஆசிரியர்கள், 10ம் வகுப்பு கேள்விகளை எடுத்துள்ளனர். ஒன்பதாம் வகுப்பு, துணைப் பாடத்தில் வினாக்கள் எடுப்பதற்கு பதிலாக, 10 ம் வகுப்பு துணைப்பாடத்தில் இருந்து, வினாக்கள் வந்துள்ளன. பொது அறிவு வினாவும், 10 ம் வகுப்பில் இருந்து கேட்கப்பட்டு உள்ளது. "எந்த வகுப்பிற்கு கேள்வி தயாரிக்கிறோம்' என, தெரியாமல் வினாத்தாள் தயாரித்து உள்ளனர்' என்றார்.முதன்மைக் கல்வி அலுவலர் சுகுமார் தேவதாஸ் கூறுகையில், ""குளறுபடியான வினாத்தாளை, எப்படி எடுத்தனர் என, விசாரிக்கப்படும். மாணவர்கள் அச்சப்பட தேவை இல்லை,'' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...