கோடை விடுமுறையிலும் பணிக்கு வரவேண்டும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்விதுறை அதிரடி உத்தரவு.

கோடை விடுமுறையின் போது தலைமை ஆசிரியர்கள் பணிக்கு வரவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.முழு
ஆண்டு தேர்வு முடிந்து அனைத்து பள்ளிகளுக்கும் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டுக்கான ஆயத்த பணிகளை விடுமுறை நாட்களில் மேற்கொள்ள வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்காக அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியரும், ஒரு அலுவலக பணியாளரும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பணிபுரிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.அலுவலக நிமித்தமாகவோ அல்லது மருத்துவ விடுப்பு எடுக்க நேரிட்டாலோ முதன்மை கல்வி அலுவலரின் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி ஆய்வின்போதும், தொலைபேசி அழைப்பின் போதும் தலைமை ஆசிரியரோ, அலுவலக பணியாளரோ இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்த சுற்றறிக்கைஅனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...