ஆன்-லைனில் ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம்

தொடக்க கல்வி பட்டயத்தேர்வு எழுதும், தனித் தேர்வர்களுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பெறும் வசதி
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு சார்பில், மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வரும் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (டயட்) கடந்த கல்வி ஆண்டுக்கான இறுதி தேர்வு 2012 ஜூன்-ஜூலையில் நடந்தது. தவிர, தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் தேர்வும் அப்போதே நடந்தது. ஆசிரியர் பயிற்சி தேர்வுகளில் தவறிய மாணவர்களுக்கும், அடுத்த ஆண்டே எழுதும் விதமாக தனித்தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த தனித் தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பெற்று விண்ணப்பிக்கும் முறை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன், ஒவ்வொரு ஆண்டும் தனித் தேர்வு எழுதுவோர், அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், தான் விண்ணப்பங்களை பெற்று அங்கேயே விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பங்களை பெறுவதில், நடைமுறை சிக்கல்களும், சிரமங்களும் இருந்தன. இதைபோக்கும் வகையில், தனித் தேர்வு எழுதுவோர், tn.govt.in/dge என்ற இணையதளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பெறலாம். விண்ணப்பத்தில் 1 முதல் 4 ம் பக்கம் வரை விண்ணப்பிப்பதற்கான, அனைத்து விபரங்களும், ஐந்து, ஆறாம் பக்கத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதில் பின்பற்ற வேண்டிய அறிவுரைகளும் இடம் பெற்றிருக்கும். ஏப்., 18 முதல் 29 ம் தேதி வரை, இணையதளத்தில் விண்ணப்பங்களை பெறலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, ஏப்., 29 மாலை 5 மணிக்குள் அந்தந்த மாவட்ட டயட் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்,என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...