திருத்தம்!!!

*2013-2014 ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் விதியில் திருத்தம் 
*அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு 
*பெண் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.
திருத்தம் 2. அரசாணை (டி1) எண்.129 பள்ளிக்கல்வித்துறை, நாள்.09.05.2013ல் கீழ்கண்டவற்றை பத்தி 15 ஆக சேர்க்கப்படுகிறது.
15) 2013-2014 ஆம் கல்வியாண்டில் அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களில் பெண் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். அரசு ஆண்கள் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களில் ஆண் ஆசிரியர் மற்றும் ஆண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். இருபாலர் பயிலும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு பொது மாறுதல் விதிகளின் படி ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் அளிக்கலாம். தற்பொழுது பணிபுரியும் ஆசிரியர் /  தலைமை ஆசிரியர்களுக்கு இவ்விதி பொருந்தாது.



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...