முன்னேற்றத்தின் முதுகெலும்பு -இன்று தேசிய தொழில்நுட்ப தினம்

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் நாட்டின் சாதனைகளை அங்கீகரிப்பது; புதிய தொழில்நுட்பங்களை உரு வாக்கு வது; வருங்கால இளைஞர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துதல்
ஆகியவற்றை வலியுறுத்தி, மே 11ம் தேதி தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது. அறிவியல் - தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இத்தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

எப்படி வந்தது:பொக்ரானில் 1998 மே 11 மற்றும் 13ம் தேதி, இந்தியா நடத்திய அணுகுண்டு சோதனைகள் வெற்றி பெற்றன. இதன் மூலம் உலகின் அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து கொண்டது.இச்சாதனையை அங்கீகரிக்கும் விதமாக இந்த நாள்,தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவிக்கப்பட்டது.பொக்ரான் அணுகுண்டு சோதனை, உள்நாட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்ட திரிசூல் ஏவுகணை மற்றும் ஹன்சா-3 விமானம் ஆகிய கண்டு பிடிப்புகள், நாட்டின் சாதனைகளில் ஒரு மைல்கல்.

இது தவிர, கண்டம் விட்டு கண்டம் பாயும் (5000 கி.மீ.,) அக்னி - 5 ஏவுகணை ஏவியது, இஸ்ரோ 100 செயற்கைக் கோள் களை விண்ணில் ஏவியது ஆகியவை இந்திய அறிவியல், தொழில்நுட்ப துறையின் சமீபத்திய சாதனைகள்.

முன்னேற்றம் தேவை: விண்வெளி, பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில், இந்தியா சிறப்பாக முன்னேறி வருகிறது. உள்நாட்டு தயாரிப்பிலேயே "கிரையோஜெனிக்' இயந்திரத்தை உருவாக்கு வதில், நாம் இன்னும் வெற்றி பெறவில்லை. மேலும் பசுமை தொழில்நுட்பம், கல்வி, õடு வளர்ப்பு, தண்ணீர் சேமிப்பு, மரபுசாரா எரிதி உற்பத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் விவசாயத்தில் நவீன யுக்திகளை பயன்படுத்துவது போன்றவற்றில் நாம் இன்னும் முன்னேற வேண்டியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...