சோயா பால் தயாரிக்கும் முறை !

சோயா பாலை எந்தவிதமான கெமிக்கல் இல்லாமல் இயற்கையில் எளிய முறையில் மதிப்புகூட்டும் முயற்சியால் மூன்று மாதம் கெடாமல் வைத்திருந்து இந்த சோயா பாலிலிருந்து பாதாம்பால் தயாரித்து விற் பனை செய்தால்,
லாபம் அடையலாம்.

சோயா பாலில் சர்க்கரை, எசன்ஸ், சிறிது சமையலுக்கு பயன்படும் உப்பு சேர்த்து சுவையான பாதாம்பால் தயாரி க்கலாம். சோயா பீன்சிலிருந்து மூன்று விதமாக சோயாபால் எடுக்கலாம்.

* சிவப்பு சோயாபால் விதையில் தோல் உரிக்காமல் அப்படியே பால் எடுக்லகாம். ஆனால் அதன் நிறம் இளம் ஊதாநிற த்தில் இருக்கும்.

* சோயா விதையில் அதன் தோலை நீக்கி அதன் வெள்ளைநிற சோயா விதையிலிருந்து பால் எடுத்தோமானால் சோயாபால் வெள்ளையாக இருக்கும்.

* மளிகை கடைகளில் விற்கும் சோயா பீன்ஸ் டிரை சோயா பீன்ஸ் ஆகும்.

வாங்கி வந்த சோயா பருப்பை நன் றாக கழுவி 8 மணி நேரம் ஊறவை த்து மறுபடியும் சோயாபருப்பை கழுவி சுத்தம் செய்து அதிலிருந்து சோயா பால் தயாரிக்கலாம். இதன் சுவை மணமும், நிறமும் சற்று மாறுதலாக இருக்கும். தரம் குறைவாக இருக்கும். சோயாபால் தயாரிப்பதற்கு இயந்திரம் உள்ளது. இந்த இயந்திரத்தின் பெயர் சோயா டைரக்ட் என்பதாகும். இதன்மூலம் குறைவான பாலை உற்பத்தி செய்ய முடியும். ஆட்டோமெடிக் இயந்திரம் உள்ளது. ஒவ்வொரு பிராண்டைப்பொறுத்து அதன் கொள்ளளவு பொறுத்து விலை 3 லட்சம் முதல் கிடைக்கும்.

மாட்டு பாலுக்கு மாற்றாக பயன்படுத்தி சோயா பாலிலிருந்து பத்து வகையான உணவு தயாரிக்கலாம்.

1. பாதா ம்பால்,
2. பிஸ்தா மில்க்,
3. ஏலக்காய் மில்க்,
4. ரோஸ் மில்க்,
5. ஸ்ட்ராபெரி மில்க்,
6. பைன் ஆப்பிள் மில்க்,
7. வெண்ணிலா மில்க்,
8. ஜிகர்தண்டா மில்க்,
9. சாக்லேட் மில்க்,
10. காபி மில்க் ஆகியவை.

சோயா பாலிலிருந்து எளிய முறையில் வீட்டிலிருந்தபடியே சிறு தொழிலாக அமைத்து பெரிய தொழிலாக மாற்றி அதிக லாபம் அடையலாம்.

இந்த சோயா பீன்ஸ் விதையிலிருந்து பால் எடுத்தபிறகு அதன் கழிவு சத்தான உணவு ஆகும். இதற்கு ஒகாரா என்று பெயர். இதில் அதிகமாக நார்சத்து உள்ளது. இந்த ஒகாரா மாற்று உணவுப் பொருட்களுடன் பிஸ் கட், கோதுமை மாவு, மற்ற தானிய உணவுடன் சேர்த்துக் கொண்டால் உடல் நலத்திற்கு ஆரோக்கியமாக இருக்கும்.

இந்த சோயா பால் தரமான மாட்டு பாலில் உள்ள சத்துக்களைவிட அதிக சத்துக்கள் கொண் டது. இந்த சோயா பாலில் எனர்ஜி, புரோட்டின், கொழுப்பு, கார்போ ஹைட்ரேட், கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, சோடியம் உள்ளது. இதைப்போல் 30க்கும் மேற்பட்ட வைட்டமின் கள் உள்ளன.

இந்த சோயாபால் தினமும் அருந்தினால் கொலஸ்டிரால் அளவு குறைந் துவிடும். இதயம் மற்றும் சிறுநீரகம் நல்ல ஆரோக்கியமாக செயல் படும். உடலில் கேன்சர் செல் வராமல் தடுக்கும். மூளையின் ஞாபகசக்தி அதிகரிக்கும். மெல்லிய தேகம் உள்ளவர்கள் சோயாபால் அருந்தினால் உடல் வலுப் பெறும். உடலில் சர்க்கரை அளவு கட்டுப்பட்டு குறைந்து விடும்.

உடலில் சீக்கிரம் செரிமானமாகும். நார்ச்சத்து அதிகம் உள்ளதால் குடலுக்கு ஏற்ற உணவாகும்.

சோயாபாலிலிருந்து பாதாம்பால் தயாரிக்க சிறிய பாதாம்பால் பாட்டில் தேவைப்படும். இந்த பாதாம்பால் பாட்டிலில் பத்து வகையான நறுமண பால் வீட்டிலிருந்தபடியே சிறு தொழிலாக குறைந்த முதலீட்டில் ஒரு பாதாம்பால் தயாரிப்பு செலவு ரூ.5.00. அடக்கவிலை நமக்கு ஏற்படும். அதன் பாட்டிலின்மேல் லேபிள்கம்பெனி பெயர், எக்ஸ்பைரி டேட், எம்ஆர்பி: 15.00 என்று அச்சிட்டு கடைக்கு பாட்டில் ரூ. 10.00க்கு விற்பனை செய்ய வேண்டும்.

குறைந்தது ஒரு நாளுக்கு 100 பாட்டில் விற்பனை செய்தோமானால் நமக்கு மாதத்திற்கு செலவு போக ரூ.15,000 லாபம் கிடைக்கும். வீட்டில் உள்ள இரண்டு நபர்கள் தேவைப்படும். நம் வீட்டில் உள்ள அறையே போதுமானதாகும். மாட்டுப் பால், சோயாபால் இந்த இரண்டு வகையான பாலில் நாம் எந்தவிதமான கெமிக்கல் கலந்தாலும் இரண்டு பாலும் கெட் டுவிடும். அதாவது பென்சாயிக் ஆசிட் மற்றும் பிரிசர்வேட்டிவ் கிளாஸ்-2 கெமிக்கல் கலக்கக்கூடாது.

பாதாம்பால் ஏஜன்சி எடுத்து செய்ப வர்கள், ரஸ்னா மோர் தயாரித்து விற்பனை செய்பவர்கள், சோடா கலர் கம்பெனி நடத்துபவர்கள் மற்றும் சாக்லேட், பிஸ்கட், தண்ணீர் பாக்கெட் விற்பனை செய்பவர்கள் அனைத்து ஏஜென்சி எடுப்பவர்கள் வீட்டிலிருந்தபடியே சோயாபால் தயாரித்து எளிய முறை யில் அதிகமாக சம்பாதிக்கலாம்.

இதனை கையில் எளிய முறையில் தயாரித்தாலும் இயந்திரத்தின் உதவியுடன் தயாரித்தாலும் மிகவும் முக்கியம் ஒவ்வொரு கடைக்கும் சந்தைப் படுத்துவதன் மூலம் இயற்கை அங்காடி, இன்ஜினியரிங் காலேஜ் கேன்டீன், சூப்பர் மார்க் கெட், பள்ளி கேன்டீன் இவற்றின்மூலம் வியாபாரத்தை அதிகப்படுத்தி லாபம் கூடுதலாக சம்பாதித்து வாழ்க்கை த்தரத்தை சொந்த தொழில் மூலம் உயர்த்திக் கொள்ளலாம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...