மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க கோரி மறியலில் ஈடுபட்ட ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் 285 பேர் கைது


மத்திய அரசு ஆசிரியர் களுக்கு இணையான சம்பளம் வழங்க கோரி சிவகங்கையில் மறியல் போராட்டத்தில் ஈடு பட்ட ஆரம்ப பள்ளி ஆசி
ரியர் கூட்டணியினர் 285 பேர் கைது செய்யப் பட்டனர்.
மறியல்
மத்திய அரசு ஆசிரியர் களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டமே தொடர வேண்டும் என்பதுஉ ள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சிவகங்கையில் மாவட்ட தலைவர் முத்து பாண்டி யன் தலைமையில் மறியல் போராட்டம் நடை பெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட தாக மாவட்ட செயலாளர் தாமஸ் அமலநாதன், மாநில துணை தலைவர் சந்திரசேகரன் மற்றும் 146 பெண்கள் உள்பட 285 பேர்கள் கைது செய்யப் பட்டனர்.
முன்னதாக போராட்டத்தை வாழ்த்தி சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ குணசேகரன் மற் றும் நகராட்சி தலைவர் அர்ச் சுனன் ஆகியோர் பேசினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...