அரசு சின்னத்தில் கோவில் கோபுரம்: மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

"தமிழக அரசின் சின்னத்தில், கோவில் கோபுரம் பொறிக்கப்பட்டிருப்பதால், குறிப்பிட்ட மதத்தை ஊக்குவிப்பதாகக் கூற முடியாது' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்மருவத்தூரைச் சேர்ந்த, கண்ணன் கோவிந்தராஜுலு என்பவர் தாக்கல் செய்த மனுவில், "தமிழக அரசு சின்னத்தில், கோவில் கோபுரம் பொறிக்கப்பட்டுள்ளது. இது, இந்து மதத்தின் சின்னம்; இதை மாற்ற வேண்டும். மேலும், தேசியக் கொடியும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது. இதை சரியான வடிவமைப்பில் பொறிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. இம்மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: குறிப்பிட்ட மதத்துக்கு சாதகமாக, தமிழக அரசு நடந்து கொண்டதாக, எந்தப் பிரச்னையும் இல்லை. குறிப்பிட்ட மத விழாக்களின் போது, அந்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது, மதத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்களின் வழக்கம். கோவில் கோபுரம், தமிழக அரசின் சின்னத்தில் இடம் பெற்றிருப்பதால், குறிப்பிட்ட மதத்துக்கு முன்னுரிமையோ, அதை ஊக்குவிப்பதாகவோ கூற முடியாது. சின்னத்தில், தேசியக் கொடி இடம் பெற்றிருப்பதைப் பொறுத்தவரை, சட்ட விதிகள் எதுவும் மீறப்படவில்லை. தேசியக் கொடியின் மாண்பை பாதுகாக்க, கொடி விதிகளின்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசின் சின்னத்தில், தேசியக் கொடி, பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...