சச்சின் கையால் சாதனை விருது! துணை கலெக்டர் அசத்தல்!

சச்சின் கையால் சாதனை விருது! துணை கலெக்டர் அசத்தல்!
மதுரை மாவட்டத்தின் கூடுதல் கலெக்டர் ரோஹினி ராம்தாஸ் ஊரக வளர்ச்சி முகமை மூலம் தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டிச் சிறப்பான சுகதாரப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அலங்காநல்லூர், திருமங்கலம், வாடிப்பட்டி போன்ற பகுதிகளில் முழு ஆர்வத்தோடு செயல்பட்டு, கிராம மக்களுக்குக் கழிப்பறைகள்
கட்டிக்கொடுத்து அதனைப் பயன்படுத்த வலியுறுத்தி, பல விழிப்பு உணர்வுகளைப் பொதுமக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார். அதனால் விருவிருவென்று ‘தூய்மை பாரதம்’ திட்டத்தின் மூலம் பல பயனாளர்கள் பயன்பெற்றனர். அதனைத் தொடர்ந்து ரோஹினி ராம்தாஸுக்கு சமூக வலைதளங்களிலும் பத்திரிகைகளிலும் பாராட்டுகள் குவிந்தன. இந்த நிலையில் மத்திய அரசின் சார்பாகவும் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் சார்பாகவும் டெல்லியில் நடந்த விழாவில் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் கைகளால், சாதனைக்கான விருது வழங்கப்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...